ஞாயிறு, 18 மார்ச், 2012

வாழ்நாள் நீட்டிக்கப்பட வேண்டுமா

وَاتَّقُواْ اللّهَ الَّذِي تَسَاءلُونَ بِهِ وَالأَرْحَامَ إِنَّ اللّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا }

...எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 4:1



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

உறவைப் பேணி வாழுங்கள் என்றும் உறவுகளை அலச்சியம் செய்யும் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் என்றும் சாதாரண உபதேசமாக அல்லாமல் எச்சரிக்கையாகவே விடுக்கிறது இஸ்லாம்.

உறவினர்களுக்கு ஸலாம் சொல்வதும், அவர்களை நலம் விசாரிப்பதும், அவர்கள் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வதும், இறுதிச் சடங்கில் கலந்து கொள்வது மட்டும் தான் உறவைப் பேணுதல் என்று நினைத்து விடாமல் இறைவன் நமக்கு கொடுக்கின்ற பொருளாதாரத்திலிருந்தும் உறவினர்களில் நலிவடைந்தோருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை  முன்னேற்றி விடச் சொல்கிறது இஸ்லாம்.

திருமறைக்குர்ஆனில் 2:83, 2:177, 2:215, 4:1, 4:36, 8:75, 16:90, 17:26, 30:38, 42:23, 47:22, 59:7, 90:15 போன்ற வசனங்களில்; இறைவன் வலியுருத்திக் கூறுகிறான்.

மனிதர்கள் இவ்வுலகில் நிறைந்த பொருள்வளத்துடன் நீண்டகாலம் வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக ஓடியாடி உழைத்து செல்வத்தைக் குவித்து வைத்துக் கொண்டு திட்டங்கள் பல தீட்டி அதில் வித விதமாக சுகமனுபவித்து வாழ்ந்து வருகின்றனர்.  

இப்படிப் பட்டவர்களின் உடல் நலத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டு விட்டால் இத்தனை செல்வங்களையும் உலகில் விட்டு விட்டு திடீரெனப் போய் விடுவோமோ என்ற அச்சத்தால் ஆயுளை கெட்டியாக்கிக் கொள்வதற்கு உயர் ரக ஆஸ்பத்திரயைத் தேடி மூலை முடுக்குகளுக்கெல்லாம் ஓடுவார்கள், அதில் முன்னேற்றம் கிடைக்கவில்லை என்றால் பிரசித்திப் பெற்ற(?) அவ்லியாக்களிடம் அடைக்கலம் புகுவார்கள், தாயத்து தட்டுத் தகடுகள் மூலம் மலக்குல் மௌத்துக்கு ( உயிரை எடுக்க வரும் வானவருக்கு ) தடுப்பு சுவர் போடுவதற்காக (?) மாந்திரீகர்களிடம் தஞ்சம் புகுவார்கள்.  

அவர்கள் எந்தெந்த வழிகளில் என்னமாய் ஓடினாலும் எதுவும் பலனளிக்காமல் இறுதியாக விதியில்  எழுதப்பட்ட விதம் அவர்களின் கதை முடிந்து விடுவதையும் பார்க்கிறோம்.

''நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே... திருக்குர்ஆன் : 4:78.

காரணம் அவர்களின் வாழ்வாதாரமும், வாழ் நாளின் முடிவும் ஏற்கனவே விதியில் எழுதப்பட்டு விட்டதால் அதை எந்த மருத்துவராலும், எந்த அவ்லியாவாலும், எந்த மாந்திரீகராலும் மாற்ற முடியாது, மாற்றியதில்லை அங்கெல்லாம் சென்றவர்களில் ஏராளமானோரின் முடிவு படுதோல்வியில் முடிந்ததைப் பலர் அறிவர்.

...எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன ஏடுகள் காய்ந்து விட்டன. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி.

எழுதியவனே மாற்றி எழுதுவான் 

உயிர் பிச்சைக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாள் கணக்கில், மாத கணக்கில் அவ்லியாக்களின் கப்ருகளிலும், ஆஸ்பத்திரியின் வார்டுகளிலும் காலத்தைக் கழிப்பவர்கள் கத்தைக் கத்தையாக கரன்சிகளை வாரி இறைப்பவர்களில் பலர் உறவினர்களின் வறுமையைப் போக்குவதற்காக சிறிது தொகையையும், அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக சிறிது நேரத்தையும் ஒதுக்க மாட்டார்கள். இவ்வாறு செலவிடுவதால் நேரத்தை ஒதுக்கி அலைவதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்றே அலச்சியம் செய்வார்கள். ஆனால் அதில் எண்ணிப் பார்க்க முடியாத பலன் இருப்பதை அவர்கள் அறிவதில்லை.

இறைவன் நமக்கு தரக்கூடிய பொருளாதாரத்திலிருந்து சிறிதை தனது பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கு செலவிட்டு சிறிது நேரத்தை ஒதுக்கி அவர்களின் தேவையை நிறைவேற்றிக் கொடுத்து அவர்களுடன் இணக்கத்துடன் வாழ்ந்து வந்தால் உயர் ரக ஆஸ்பத்திரியை தேடி ஓட வேண்டிய தேவை இல்லாமல், பிரசித்திப்பெற்ற(?) தர்வாவில் அடைக்கலம் புக வேண்டிய அவசியமில்லாமல் அவர்களின் வாழ்வாதாரத்தையம், வாழ் நாளையும் வல்லோன் இறைவன் நீட்டித்துத் தருவதாக இறைநம்பிக்கையாளர்களுக்கு இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

தம் வாழ்வாதாரம்(ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களும், அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களும் அறிவிக்கின்றனர். புகாரி 5985, 5986.

உறவுகளைப் பேணி வாழாவிட்டால் விதியில் எழுதியபடி மட்டும்  நடக்கும் வேறொன்றும் நிகழாது என்று எண்ணி விட்டு விடக்கூடாது அவ்வாறு எண்ணி உறவுகள் விஷயத்தில் அலச்சியம் காட்டுபவர்கள் இன்று மிகைத்திருப்பதைப் பார்க்கிறோம். அவ்வாறு நினைத்தே பலர் அற்ப காரணங்களுக்காக அறுபட முடியாத தொப்புள் கொடி உறவையும் கூட அற்பமாக எண்ணி அறுத்துவிட முணைகின்றனர். இப்படிப்பட்டவர்களிடம் இறைவனும் அவர்களுடனான உறவை உலகில் முறித்துக் கொள்வதாக இறைத்தூதர்(ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.  

உறவு (ரஹிம்) என்பது, அளவிலா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே, இறைவன் (உறவை நோக்கி) 'உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்'' என்று இறைவன்  கூறியதாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 5988.

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும் எனவே, 'அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி.5989

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையயோனுமாகிய அகில உலக அதிபதியாகிய அல்லாஹ்வுடனான உறவு உலகில் அவனுடைய அடியானுக்கு முறிந்து விட்டால் நியாயத் தீர்ப்பு நாளில்  அவனுடைய நிலை என்னவாகும் ? என்பதை எண்ணிப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.   

உறவை முறித்துக் கொள்பவர்கள் மீது இறைவனின் கோபம் இருப்பதை அறிந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தங்களை ஒதுக்கி வாழ்ந்த தங்களுடைய குடும்பத்தார்களிடம் நீயா ? நானா ? என்று ரோஷம் பாராட்டாமல் அவர்களே வழியச் சென்று உறவை புதுப்பித்துக் கொள்வார்கள் தங்கள் தோழர்களையும் அவ்வாறே நடந்து கொள்ள உபதேசம் செய்தார்கள். 

பதிலுக்கு பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவார். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல்: புகாரி 5991.

அபூ ஹூரைராவே நற்குங்களை மேற்கொள்வீராக ! என்று என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  கூறியதும் இறைத்தூதர் அவர்களே! எவ்வாறு நான் நற்குணங்களைப் பேணுவது என்று கேட்டேன் அதற்கவர்கள் உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ், உனக்கு அநீதம் செய்தவரை மன்னித்து விடு, உனக்கு தர மறுத்தவருக்கு நீ கொடுத்து உதவு என்று கூறியதாக அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் : பைஹகீ

உலகில் ஒரு முறை பிறந்து விட்டால் மீண்டும் பிறக்கப் போவதில்லை அதனால் அடுத்து பிறக்கும் பொழுது பார்த்துக் கொள்வோம் என்று உறவுகளை தள்ளி வைக்க முடியாது.

அதேப் போன்று எப்பொழுது உலகிலிருந்து விடை பெறுவோம் என்ற அறிவும் நமக்கு கொடுக்கப்படாததால் உறவுகள் விஷயத்தில் தாமதப் படுத்த முடியாது.

செல்வ செறுக்குடனும், திடகாத்திரமான ஆரோக்கியத்துடனும் வாழும் காலத்திலேயே உற்றார், உறவினர்களில் வறியோருக்கு இயன்றளவு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் மீது அன்பைப் பொழிந்து இணைந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

பாவங்கள் மன்னிக்கக் கூடிய புனித ரமளான் மாதம் மிகவும் அன்மித்து விட்டதால் நற்செயல்களை இப்பொழுதே தொடங்கி விடுவோம்.  

எழுதியபடி என்னையும், வாசித்தபடி உங்களையும் உறவுகளைப் பேணி அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் நன் மக்ககளாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.


وَلاَ يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُمْ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاللّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ 180


அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு சிறந்தது என்று எண்ண வேண்டாம் மாறாக அது அவர்களுக்கு தீயது அவர்கள் எதில் கஞ்சத் தனம் செய்தார்களோ அதன் மூலம் மறுமை நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 3:180

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...   

ஏழையின் சிரிப்பில் எவ்வாறு இறைவனைக் காண முடியும் என்பதை பெருமானார்(ஸல்) அவர்கள் உயிருடன் வாழ்நத காலத்திலேயே பட்டியலிட்டுக் கூறி அதை அவர்களும் அவர்களுடைய ஆருயிர் தோழர்களும் நடைமுறைப் படுத்தி;க் காட்டினார்கள்.

அல்லாஹ் இறுதித் தீர்ப்புநாளில் கூறுவான்: ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு உணவளிக்கும்படி கேட்டேன், ஆனால் நீ உணவளிக்கவில்லை.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் உணவளித்து அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய பசிக்கு உணவளிக்கும்படிக் கேட்டான். ஆனால் நீ மறுத்து விட்டாய் நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அதை நீ எனக்கு அளித்ததாக பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது நீ என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
   
ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு நீர் புகட்டும் படிக்கேட்டேன், ஆனால் நீ மறுத்து விட்டாய்.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் நீர் புகட்டி அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்க, நான் எப்படி உனக்கு நீர் புகட்ட முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்ட பொழுது  நீ அதை மறுத்து விட்டாய் நீ அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கொடுத்திருந்தால், நீ எனக்கு நீர் புகட்டி என் தாகத்தை தனித்ததாக நான் கருதி பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று இறைவன் கூறுவதன். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆதார நூல் (முஸ்லிம்)

ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத வறியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பசியோடும், தாகத்தோடும் நின்று கையேந்தும் பொழுது அவருக்கு தேவையான உணவையும், நீரையும் புகட்டினால் அவர் உண்டு புசித்து அவரது பசி அடங்கும் போது உங்களை நோக்கி புன்முறுவல் பூப்பார் அங்கு இறைவனைக் காண்பீர்கள் என்று கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் கூறினார்கள்.

அத்துடன் தர்மத்தை ஆர்வமூட்டி இறைவனிடமிருந்து புனித வசனங்கள் இறங்கியதும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடைய தோழர்கள் ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் பொருளாதாரத்தை ஏழை எளியோருக்கு வாரி வழங்கி இறைதிருப்தியை அடையலானார்கள்.

தர்மம் செய்ய வில்லை என்றால் இறைகோபத்திற்கு ஆளாக நேரிடுமோ ? என்று அஞ்சிய ஏழை  நபித்தோழர்கள் கடை வீதிகளுக்கு சென்று கூலி வேலைப் பார்த்து அதில் கிடைக்கின்ற சொற்ப கூலியில்  தங்களுடைய குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மீதியை ஏழை எளியோர்களுடைய வீடுகளை தேடிச்சென்று அவர்களுடைய துயர் துடைத்த நிகழ்வுகள் உலக வரலாற்றில் சல்லடை போட்டுத் தேடினாலும் பெருமாhர்(ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதயாத்தில் தவிர வேறு எதிலும் திட்டவட்டமாக காண முடியாது.

ஜென்டில் மேன் ??? சமுதாயத்தினர்களால் இன்றளவும் ஒட்;டக ஓட்டிகள் என்றும், காட்டு மிராண்டிகள் என்றும் ஏளனம் கூறிய மக்களைக் கொண்டே மேல்படி ஜென்டில்மேன்களே ??? வெட்கி தலைகுணியும் அளவுக்கு சகோதரத்துவம் - சமத்துவம் போன்ற எண்ணற்ற மனிதாபிமான அடிப்படையிலானப் பணிகளை செய்ய வைத்து சாதனைப் படைத்துக் காட்டினார்கள் எம்பெருமானார்(ஸல்) அவர்கள்.

யாசகம் கேட்டு கையேந்தாத ஏழைகள்

மக்களுடைய வீடுகளுக்குச் சென்று ஒரு கவளம், இரண்டு கவளம் அல்லது ஒரு பேரீச்சை, இரண்டு பேரீச்சம் பழங்கள் வாங்கிக் கொண்டு திரும்புபவர்கள் ஏழையல்ல மாறாக, தன் தேவைகளை நிறைவு செய்துகொள்ளும் அளவுக்கு வசதி இல்லாதவரே ஏழை. மக்கள் அவர்களுடைய ஏழ்மையைப் புரிந்து கொள்வதும் இல்லை. அவர்களும் மக்கள் முன்னால் சென்று கையேந்துவதில்லை. இத்தகையவர்களே ஏழைகளாவார்கள். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ஆதார நூல் (புகாரி, முஸ்லிம்)

ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் அம்மா தாயே! பசி தாங்க முடியவில்லை என்று வீட்டு வாசலில் கையேந்தி நிற்கும் பரம ஏழைகள் ஒரு ரகம்,

பிறரிடம் யாசகம் கேட்டு கையேந்த வெட்கப்பட்டு வறுமையிலும், கடனிலும் உழண்டுத் தவிக்கும் ஏழைகள் இன்னொரு ரகம்.

மேற்கானும் முதல் ரகத்தினர் நமது சொந்த ஊர்க்காரர்களாகவும் இருக்கலாம் அல்லது வெளிஊர் காரர்களாகவும் இருக்கலாம்.

ஆனால் இரண்டாம் ரகத்தினரை ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் ஊரில், அதே தெருவில் பார்க்கலாம். அவர்களுடைய நிலையே மிகவும் பரிதாபகரமானது ,

  • வாடகை வீட்டில் வசிப்பார்கள் வாடகை செலுத்த முடியாமல் வீட்டுக்கு சொந்தக்காரரிடம் தவணைக்கு மேல் தவணை சொல்லிக் கொண்டிருப்பார்கள்,
  • அத்தியாவசிய தேவைகளுக்காக பிறரிடம் கடன் பெற்று குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியாமல் கடன் காரரிடம் தேவையற்ற வாரத்தைகளைக் கேட்டுக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் பரிதவிப்பார்கள் கடன் வாங்கும் போது ஒரு பொய் சொல்வார்கள், குறிப்பிட்ட தவணையில் செலுத்த முடியாததற்கு பல பொய்களை சொல்வார்கள்.
  • நன்றாக படிக்கக் கூடிய பிள்ளைகளை செலவு செய்து படிக்க வைக்க முடியாமல் டீ கடைகளில் கிளாஸ் கழுவ விட்டிருப்பார்கள். அவனுக்கு திறமை இருந்தும் அவனது பெற்றோரிடம் பொருளாதாரம் இல்லாததால் படிக்க முடியாமல் சமுதாயத்தில் பின்னடைவை அடைந்து விடுவான்.
  • காலை உண்டால் மதியம் இல்லை, மதியம் உண்டால் இரவுக்கில்லை, என்று பசியால் வாடி வதங்குவார்கள் ஆனாலும் யாசகம் கேட்க அஞ்சுவார்கள்.

ஹஜ் செய்யச் செல்லவிருக்கும் செல்வந்தர்களே! ஹஜ் செய்யச் செல்வதற்கு முன் சுவர் விளம்பரங்களுக்காக ''வால்போஸ்டர்கள்' அடிப்பதற்கென்று பெருந்தொகையை ஒதுக்குவார்கள் ?

ஹஜ்ஜை முடித்து விட்டு தாயகம் திரும்பும் அப்துல் குத்தூஸ் ஹாஜியார் ??? அவர்களை வருக! வருக! என வரவேற்கிறோம் !! என்று ஊர் முழுவதும் உள்ள சுவர்களில் நீங்கள் வருவதற்கு முன்பே ஒட்டுவதற்காக ஒரு தொகையை ஒதுக்குவீர்கள்.

ஹஜ் செய்வதற்கு முன் ஊரில் உள்ள உங்களைப் போன்ற செல்வந்தர்கள் வரவழைக்கப்பட்டு உயர்தர விருந்திற்கு ஏற்பாடு செய்வீர்கள் அதற்கு பெருந் தொகையை ஒதுக்குவீர்கள் குறைந்த பட்சம் அந்த விருந்திலும் கூட அன்றாடங் காய்ச்சிகளை புறக்கனிப்பீர்கள் விருந்துகளில் கெட்ட விருந்து பணக்காரர்கள் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கனிக்கப்படும் விருந்தாகும் என்று பெருமானார்(ஸல்) அவரகள் கூறியதாக அபூஹூரைih(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். புகாரி-முஸ்லீம்

ஹஜ்ஜூக்கான பயண செலவுகள் போக குறைந்தபட்சம் இதர ஆடம்பர செலவுகளுக்காக ஒதுக்குகிற தொகைளையாவது தேவையுடைய மக்களுக்கு கொடுத்துதவுங்கள்.

ஆடம்பர விருந்துக்காக ஒதுக்குகிற தொகையில் ஒரு ஏழை மாணவனை இஞ்சினியராக்கலாம் அது ''ஸதக்கத்துல் ஜாரியா' எனும் நிரந்தர தர்மத்தில் சேர்க்கும் !

இரண்டு முறை செய்யப்படும் சுவர் விளம்பரங்களுக்காக ஒதுக்குகிற தொகையில் இரண்டு ஏழைகளுக்கு சிறு தொழில் செய்ய உதவலாம்.

கூலி வேலை செய்து அதில் கிடைக்கின்ற அற்ப தொகையில் தர்மம் செய்து மகிழ்ந்த உத்தமர்களுடைய வாரிசுகளல்லவா நாம் ? குறைந்த பட்சம் நம்முடைய ஆடம்பர செலவுகளை ஒதுக்கியாவது ஏழைகளுக்கு உதவ முன் வரக்கூடாதா ? சிந்தித்தால் சீர்பெறுவோம் !

மேற்கானும் இரண்டாம் ரகத்தினர் யார் என்பதை அறிந்து அவர்களை தேடிச்சென்று உங்களது பொருளாதாரத்திலிருந்து ஒரு தொகையை அல்லாஹ்வுக்காக ஒதுக்கிக் கொடுத்து

  • அவர்களுடைய கடனை அடைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.
  • அவர்களுடைய பிள்ளைகளில் ஒரிருவரை மேல்படிப்புக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.
  • எஞ்சியதை கொண்டு சிறு தொழில் செய்து கொள்ளச் சொல்லுங்கள்.

அவர்கள் உங்களிடம் கையேந்த வெட்கபப்டுவதால் நீ;ங்கள் அவர்களுக்கு செய்யும் இந்த உதவியை உங்களது வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் செய்யுங்கள். இதுவே உங்களை நரக நெருப்பிலிருந்து மீட்கும்.

சொந்த ஊரில், சொந்த தெருவில் உங்களுடைய பார்வைக்கு தெரியும் விதமாக அல்லல்படும் ஏழைகளுடைய துயர்துடைக்க முன்வராமல் பயண செலவுகளுக்காகவென்றும், தேவையில்லாமத விளம்பரத்ததுக்காகவும் பெந்தொகையை ஒதுக்கி நீங்கள் செய்த ஹஜ்ஜை இறைவனிடம் காரணம் காட்டி நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம்) செய்து நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். என அதீ இப்னு ஹாத்திம்(ரலி) அறிவித்தார். ஆதார நூல் 1418.

உலகில் செய்யும் நல்லறங்களில் மறுமையின் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு கேடயமாக அமைவது தர்மம் என்ற முக்கிய அறமாகும் என்பதை மேற்கானும் நபிமொழியில் பெருமானார்(ஸல்) அவர்கள் அவரவர் சக்திக்கு தகுந்தாற்போல் ( குறைந்த பட்சம் பேரீச்சம் பழத்தையேனும் ) தர்மம் செய்து நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளும் படி எச்சரித்தார்கள்.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு சிறந்தது என்று எண்ண வேண்டாம் மாறாக அது அவர்களுக்கு தீயது அவர்கள் எதில் கஞ்சத் தனம் செய்தார்களோ அதன் மூலம் மறுமை நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 3:180
 
ஜகாத் என்ற இறைவன் கடமையாக்கிய ஏழை வரியை கொடுத்திருப்பீர்கள் அதையும் மறுத்தால்

''அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய புதையல்'' என்று கூறும்.''

நபி(ஸல்) இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.'' என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். ஏன்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள் புகாரி  1403.

ஹஜ்ஜூடைய மாதத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜூடைய கடமையை இறைவன் இறுதி கடமையாக்கினான்.

ஹஜ்ஜூக்கு முன்பு நான்கு முக்கியமான கடமைகளை; ஒழுங்குடன் செய்திருந்தால் இறுதி கடமையகிய ஹஜ் முத்திரையாக அமைந்து விடும் அதற்காகத் தான் இறுதி கடமையாகிய ஹஜ்ஜை செய்;ய முற்படுவோருக்காக இறைவன் இரண்டரை மாதங்களை ஒதுக்கி அதில் இறையச்சத்தை திரட்டிக் கொள்ள உத்தரவிட்டான்.

  1. நீங்கள் இறையச்சத்துடன் ஹஜ் செய்கீன்றீர்களா ?
  2. சமுதாய மக்களிடம் ஹாஜி என்ற பட்டத்தைப் பெறுவதற்காக ஹஜ் செய்கின்றீர்களா ?

என்பதை இறைவன் அறியக் கூடியவனாக இருக்கிறான் அதனடிப்படையில் தண்டனையா ? வெகுமதியா ? என்பதை உலக முடிவு நாளின் விசாரணையின் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

இறையச்சத்துடன் இறைதிருப்தியை எதிர்பார்த்து ஹஜ் செய்;ய முற்பட்டால் ஹஜ்ஜை முடித்ததும் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அன்றுப்பிறந்த பாளகன் போன்றாகி அதற்குப் பிறகு இறையச்சமுடையோராய் ஆகி விடுவீர்கள்.  வல்ல அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை ஏற்றுக்கொள்ளும் பாக்கியசாலிகளாக ஆக்கி அருள் புரிவானாக !



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

வாரி வழங்குவோம்

مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللّهُ يُضَاعِفُ لِمَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ

2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.



வாரி வழங்குவோம்.

நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் கருணையின் அடிப்படையில் செய்ய வேண்டிய தர்மத்தை (உதவிப் பணிகளை) கருணையின் அடிப்படையில் செய்யாமல் கடமையாக்கப்பட்ட ஜகாத் நிதியை சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு கொடுத்து கடமையை முடித்து விட நினைக்கின்றனர் .

இறைவனுடைய வழியில் செலவு செய்கின்றவர்களுடைய நிலமை இறைவனுடைய போராற்றல் மூலம் பூமியிலிருந்து வெளிப்படும் தானிய மணிகளுடன் ஒப்பிட்டு உவமைக் கூறுகின்றான்.

நமகு கைகளிலிருந்து பூமியில் விதைப்பது ஒரு தானிய வித்து தான் அது வெளிவரும் போது ஏழு கதிர்களாகவும் ஒவ்வொரு கதிரிலும் நூரு தானிய மனிகள் முளைத்து வெளிவருகின்றது என்றால் அல்லாஹ்வுடைய நாட்டத்தில் தான் அது அவ்வாறு முளைத்து வெளி வருகிறது. 

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் வர்ணித்துக் கூறி இருக்கின்றார்கள்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்க முன் வரவேண்டும். 

அவ்வாறு தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்குவதால் நம் பொருளாதாரம் ஒருப்போதும் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான். 
2:261. தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது

  • தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து மேற்காணும் விதம் அபிவிருத்தி ஏற்படுகின்றது. 
  •  தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்படுகின்றன.

மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.  

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள். 

ஒருக் குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தான தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்ததி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள். 

சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள். 
   
நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

இன்று நம்மில் பலர் கை வசம் எதுவும் இருந்தால் கொடுத்து உதவுகிறோம், கை வசம் எதுவும் இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகிறோம், நம்மிடம் இருப்பு இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், அல்லது உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்;ய வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

இவ்வளவு தான் என்ற வறையரை. 
இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு முட்டுக்கட்டையாக அமையும். 

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.


தடுத்துக் கொண்டால் ? 
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காகவென்ற சிந்தனையில் தானதர்மம், மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரிவழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான். 

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும், அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான். கூடுதல் அபிவிருத்தயை எதிர் பார்க்க முடியாது.

கொடு;க்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.

நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்